Showing posts with label தமிழ் காமிக்ஸ். Show all posts
Showing posts with label தமிழ் காமிக்ஸ். Show all posts

Monday, June 23, 2025

பயணம்




ஞாயிறு மாலை(ஜூன் 15) ஆரம்பித்து புதன் மாலை முடித்தேன்


தொடர்ச்சியாக படிக்க என் மனதால் இயலவில்லை. காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகளை உபயோக்காமல் சித்திரங்களால் கதைக்குள் இழுத்து பயணிக்க வைத்துள்ளார் Manu Larcenet

எங்கும் வறட்சி, உணவு உருவாக்கிட வழியில்லை, குடிக்க சுத்தமான தண்ணீர் இல்லை, வெட்ட வெளியில் படுத்து தூங்கிட பாதுகாப்பும் இல்லை, இப்படிதொரு உலகில் தன் மகனை ஜீவித்து வைப்பதும் மட்டும் இல்லாமல், சுயமாக வாழ வைக்கவும் விழைந்திடுகிறார் இங்கே ஒரு தந்தை. பெயர்கள் ஒரு பொருட்டாய் இல்லை

மனிதன் உருவாருக்கி பெருமையாய் நின்ற கட்டிடங்கள், பொருட்கள் சீந்தாவாரற்று நிர்மூலமாகி கரிசலகளாக காட்சி அளிக்கின்றன். கதையிலும் குளிர், இக்கதையினை படித்திட்ட வேளையில் கொவையிலும் குளிர், அதனால் என்னமோ குளிரை உணர்ந்த மாதிரி இருந்தது😌😌😌

 காட் பிராமிஸ் என்று அச்சிறுவன் தன் தந்தையிடம் சத்தியம் கேட்டபோது எங்கே இருந்து வந்தது இந்த நம்பிக்கை என ஒரு நிமிடம் ஸ்தம்பித்தேன். அவன் வயதில் ஓடியாடி விளையாட ஒன்றும் இல்லை, பொம்மை இல்லை, நண்பர்கள் இல்லை, அவனை உற்சாகமாக்கிட எதுவுமே இல்லை, எந்த நம்பிக்கையில் அவன் தந்தையிடம் அப்படியொரு வார்த்தையை உபயோகித்தான், அவன் தந்தை அவனிடம் இதற்கு முன்னர் தன் சத்தியத்தை காக்கும் பொருட்டு இதை சொல்லி இருந்தாலும், நம்பிக்கை இழக்காமல் அச்சொற்களை உதிர்த்த அவன் மனது. இங்கு இறை நம்பிக்கை பற்றி நான் கூற வரவில்லை, ஒரு சோதனை வந்தாலே, இறைவன் இருக்கிறாரா என கேட்கும் மனிதர்களிடையே, எதுவும் இல்லாத உலகில் நம்பிக்கை கொண்ட அச்சிறுவனின் மனது என்னை உலுக்கியது.

இரு பூட்டுகள் இக்கதையில் காட்டப்படுகிறது. ஒரு பூட்டு  திறக்கப்படும் முன்னே, சிறுவனுக்கு ஏற்படும் எச்சரிக்கை உணர்வு, ஆபத்தை உணர செய்யும் நிலைக்கு வளர்ந்த விட்ட அவனது உள்ளூணர்வை காண்பிக்கிறது. இரண்டாவது பூட்டை திறக்கும் போகும் முன் பயத்தில் வேண்டாம் என சிறுவன் தயங்கி கெஞ்சி நிற்க, அவன் தந்தை அவனிடம் ஒன்று தந்திட்ட வலியால் ஒதுங்கி போக கூடாதென என சொல்லி, அதனை திறக்கிறார், நன்மையே பயக்கிறது. உணவுகளை சேமித்து வைத்த மனிதர்களுக்கு நன்றி சொல்லும் அவனின் மனம் வருடி செல்கிறது.

104 பக்கத்தில் ஒப்பிய அவன் கண்ணம், 105 பக்கத்தில் நன்கு சாப்பிட்ட பின் சதை போட்ட அவன் கன்னங்கள், சித்திரக்காருக்கு கைதட்டல்.

இந்த பூட்டுகள் போன்று தான் நம்மில் சிலர் முதல் முயற்சியில் தரும் வேதனைகளிலும் காயங்களிலும் இரண்டாவது முயற்சியை எடுப்பதில்லை.

உணவை பகிர்ந்திட தன் தந்தை மனதை சம்மத்திக்க வைத்திடும் போது, இந்த உலகில் புதிதாய் உருவாகிடும் தலைமுறையிடம் மானிடம் முற்றிலுமாக அழியாமல் தழைத்திருக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.

143 - பக்கத்தில் அவன் தந்தை திருடிய நபரிடம் நடந்திட்ட விதத்தை ஏற்று கொள்ள இயலாமல் அவன் அழுத போது, அவன் அழுகை என்னையும் ஆட்கொண்டது , இந்த இடத்தில் சித்திரம் மிக அருமை, அவன் உள்ள குமுறல்களை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் சித்திரக்கார் Manu. என்னால் சிறிது நேரத்துக்கு தொடர முடியவில்லை. அவர் அப்படி நடந்து கொண்டதும் எனக்கும் பிடிக்கவில்லை. அடுத்த பக்கத்தில் தந்தையை மசிய வைக்கும் வசனங்கள் பேசி அவரை நல்லது செய்ய வைக்கிறான். அவர் வேண்டுமென்றே செய்யவில்லை அவரது சூழ்நிலை என புரிதலுடன் பேசுவது மிக மிக அருமை. தன் தந்தை நல்லவர் என்ற பிம்பத்தை அவர் உடைக்காமல் இருந்தது நெஞ்சுக்கு இதம்.

பயணத்தை மீண்டும் தொடர்ந்திட போது அதுவரை இலைமறை காயாக இருந்த கொடூரத்தை காண நேரிடுகிறான் சிறுவன், தொடரவும் முடியாமல், கீழே வைக்கவும் முடியாமல் அடுத்தது என்ன பார்த்திடுவோம் என தொடர்ந்திட்டேன். கடல் கருப்பு வெள்ளையிலும் தந்தை தனயனுடன் ரசிக்க முடிந்தது, எதிர்பார்த்த பொலிவை இழந்துள்ளது என புரிந்து கொள்ள முடிந்தது. முடிவு நான் எதிர்பார்த்திடவில்லை, ஆனால் அவன் தந்தை அவனை தயார் படுத்தி உள்ளார் என்பது உறுதியாக தெரிந்தது.




வசனங்கள் இயல்பாக உணர்ச்சி பூர்வமாய் எழுதப்பட்டிருப்பது தந்தை மகனுக்குமான உரையாடல்களில் நம்மை ஒன்ற வைக்கிறது. "தம்பு" சகோதர்கள் சொன்னதுதான், நானும் ரசித்தேன். சாரி தம்பு ரொம்பவே மனதை கனக்க செய்தது. இறுதியில் அந்த தந்தை பேசிடும் வசனங்களில் மனம் கனத்து அழுகை வந்துவிட்டது.

விலை: 400 

ஒரு  தரமான மேக்கிங் இந்த புத்தகம்.. தன் காமிக்ஸ் வட்டத்தை நன்கு தெரிந்து வைத்து குறைவான விலையில் நிறைவான படைப்பாய் தந்துள்ளார், பதிப்பாரிசியர் திரு.  விஜயன் அவர்கள்.






Friday, May 16, 2025

விச்சு & கிச்சு ஸ்பெஷல் 1





லயன்-முத்து காமிக்ஸ் புத்தகங்களில் கடைசி பக்கங்களிலோ, அல்லது பின்னட்டையிலோ, அலங்கரித்திடும் இந்த இரட்டையர் ஜோடி சிரிக்க வைக்க தவறியதே இல்லை.

 கிச்சு எப்போதும் விச்சு சொல்வதை கேளாமல், விச்சுவையும் மற்றவர்களையும் மட்டம் தட்டி கொண்டு, தன்னை பற்றி சுய தம்பட்டம் அடித்து கொள்ளும் நபர், விச்சுவோ இவருக்கு நேர் எதிர், உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் - புத்திசாலி, பொறுமை, கவனிப்பது ஆகிய திறன்களை கொண்டதில்லாமல் மற்றவர்களுக்கு மரியாதை குடுக்கும் பழக்கமும் உள்ள நபர்.

கிச்சு அடித்திடும் கூத்துகளில், விச்சு இறுதியில் வந்து நான் சொன்னது நீதான்பா தப்பா புரிஞ்சுகிட்ட, நீதான்பா காது குடுத்து கேட்கலை என சொல்வது அல்டிமேட்😂😉😁

அவர்கள் குணங்களுக்கு ஏற்ப, அவர்கள் உடல்மொழியில் வெளிபடும் விதமாய் ஓவியங்களும் வரைய பட்டிருக்கும், அதுவும் கிச்சுவின் முகபாவனைகள் சிரிப்பலைகள் கொண்டு வந்திடும்😂😂😂😂😂

ஃபில்லர் பக்கங்களில் வந்திட்ட போதும், முக்கால்வாசி நேரம் கதை படிக்கும் முன்னே இவர்களை படித்து விடும் பழக்கம் இருந்தது.

இப்போது இவர்கள் தனியே வருவது இவர்களின் வெற்றிக்கு சான்று.


வசனங்கள் அருமையோ அருமை

 பனிக்காலத்திலே உன்னாலே சளியைக் கூடப் பிடிக்க முடியாது

 ஸ்வெட்டர் போட்ட அரைக்கால்படி

Enjoyed the dialogues


 விச்சு & கிச்சுக்கு ஒரு பெரிய ஜே

Wednesday, May 7, 2025

அடிமையாய் தோர்கல்



சுதந்திரம் நாங்க உனக்கு குடுக்கிறோம், சந்தோசமா என ராஜா கேட்க தாங்கள் கூறும் அர்த்தமற்றது என்கிறான் தோர்கல். உண்மைதானே.

அடிமையாம் அடிமை, மயங்கி கிடந்தவங்களை கடத்தி கொண்டு வந்து அடிமைன்னு சொல்கின்றவங்க நாகரீகமானவங்க, சுய மரியாதையுடன் வாழனும்னு நினைக்கிற தோர்கல் காட்டுமிராண்டி, ஒரு வார்த்தை கேட்டாங்களா

யாருங்க நீங்க எல்லாம், எப்படி பாலைவனத்தில் வந்தீங்க, எதாவது உதவி வேணுமா, அட அதுவும் வேண்டாம், ஊழியம் செய், சம்பளம் தரோம்,  இல்லை இல்லை தூக்கிட்டு வந்த ஆளுங்களுக்கு உடம்பு திடசாலியாக உள்ளது, கேட்கிறது யாருமில்லை, நீ என் அடிமை நம்மை போன்ற ஒரு மனிதன் என்று  கூட மதிப்பில்லை. 

தோர்கல் புத்திசாலிதனமாக செயல்பட்டு ஒரு வேலையை வாங்கி கொள்கிறான், அவன் குடும்ப அவனுடன் இருக்க இவிங்க அனுமதி வேணுமாம், என்ன கொடுமையாட இது.

தன் குடும்பத்திற்காக பொறுமை காக்கிறான் தோர்கல்,   அதிமேதாவிகளாக வாழ்ந்து வந்த நட்சத்திர மண்டலத்தின் மக்களான இலேனியா மற்றும் டியாகோவிற்கு இந்த புதிய உலகம் கடினமே, பொறுமை காக்க முடியவில்லை, ஆனாலும் அவர்களை அமைதி காக்க சொல்வதும் தவறே, அண்டம் தாண்டி வந்மு பூமியல் வாழும் சக மனிதர்களிடம் அடிமையாய் கிடப்பதை எப்படி பொறுத்து கொள்ள முடியும்.

தோர்கல் போன்று கடவுளரின் விதியில் இல்லாததால் இவ்வளவு கஷ்டமா என்று  நினைக்க தோன்றினாலும், அப்போ அங்கே இருக்கும் மற்ற அடிமைகள் என்ற கேள்வியும் தோன்றுகிறது.

ஹெராக்குளிஸ்க்கு இறந்தாலும் பளிங்கு கற்களால் கல்லறை செய்யப்படும் என்று சொல்லும்போது கோபம் தான் வருகிறது, 

சக மனிதனை வந்திப்பதில் குரூரம் கண்ட அவனுக்கு அப்படியொரு கல்லறை, இலேனியாவுக்கு யார் இருக்கா, அல்லது ஒரு இடம் தான் உண்டா அவளுக்கு கல்லறை கட்ட?

தனி மனித சுதந்திரம் இக்கதையில் ஒரு கேள்வி குறியாகிறது


 கிறிஸ் ஆப் வல்நார்


ராஜா ஆரிசியாவிடம், உன்னை நல்லாதானே வைச்சு இருக்கேன், அடிமையாவே நல்லா வாழு என்கிறார், சுயமாக இருக்க விரும்பும் மனிதர்கள் மீது அடக்குமுறை செலுத்திவிட்டு தான் பெரியவன் என்று காமிப்பது பெயர் ராஜாவா?

கிறிஸ் ஆப் வல்நாரை பிடிக்காது, ஆனால் அவள் இறக்கும் போது கண்ணீர் வந்துவிட்டது 😭😭😭😭😭

இப்படியொரு ராட்சசி கண்ணீரை வரவைக்க முடியுமா???

ஆரிஸியாவும், கிறிஸும் கட்டி பிடித்து விடை பெற்று கொள்ளும்போது, நெஞ்சு 😢😢😢😢😢, அங்கே நடந்த மௌன மொழியில் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் பரிமாறி கொள்ளப்பட்டன.

போகாதே கிறிஸ் என் மனம் அழுதது ....வயசான உருவம் கொண்டபோது, அப்படியே அவ இருக்கட்டும், ஜோலனை கடத்திய போது பாலைவனத்தில் அவ இறந்த போகட்டும் என நினைத்த இந்த மனதுதான் அழுதது.

 அவள் வாழ்க்கையே ஒரு போராட்டமாக தான் அமைந்திருந்தது

கிறிஸின் குழந்தை தோர்கலுடையது என புரிபடும் போது ஆரிசியாவின் மனதில்  ஏற்படும் ரௌத்திர உணர்ச்சிகளை முகத்தில்  அழுத்தமாக சித்திர படுத்தியுள்ளார்கள், எங்கே அந்த குழந்தையை பிராண்டி விடுவாளோ என்ற அளவுக்கு தோன்றிற்று. 

ஜோலனிடம் தோர்கலை போன்று இரக்க குணம் உள்ளது, ஆபத்தான சமயத்தில் கூட கிறிஸுக்கு உதவி செய்கிறான்.

இயற்கை காட்சிகள் செம, தென்றல் வீசிடும் மலைகள், ஆர்பரித்து அமைதி காக்கும் கடல், பிரமாண்ட மாளிகைகள், கதைக்கு சித்திரங்கள் பக்கபலம், ஒவ்வொரு காட்சியிலும் வண்ண சேர்க்கைகள் அட்டகாசம்.

வைக்கிங்ஸ் ஆக்ரோஷமான ஆட்கள் தான், சண்டையில் ஜெயித்தால் சக ஆளாக அவர்களிடம் வாழலாம், ஆனால் இங்குள்ள மக்கள் மனதில் அவர்களிடம் எத்தனை அடிமைகள் இருக்கோ அவ்வளவு பெருமை என்று நினைக்கும் நாகரீக மனிதர்கள். இவர்களிடம் லாஜிக்கோ, சண்டையிட்டு ஜெயிப்பதோ ஆகாத காரியம், சாமர்த்தியம் தான் உதவும்.

ஆஸ்ட்ரிக்ஸ் & ஓபளீக்ஸ் கதையில் ரோம நகரில் அடிமை வியாபாரம் கதை ஞாபகம் வந்தது, இக்கதையில் வரும் மேல் மட்ட மக்கள் உடைகள்,  ராஜாவின் உடைகளும் நடவடிக்கைகளூம் , அடிமை முறையும், சிலைகள், கட்டிங்கள் விளையாட்டு போட்டிகளும் ரோம அரசாங்கத்தை நினைவூட்டவதாக இருந்தது, தோர்கல் உலகம் ரோம அரசாங்க பகுதியையும் கடந்து செல்வதாக கூறுகின்றனரா?

இந்த இரு தோர்கல் அத்தியாங்கள் சோகம், மனதை கனமாக்கி விடுகின்றன.

Thursday, January 11, 2024

ரூபின் - 96 மணி நேரங்கள்




அதுவொரு பனிக்காலம் என ஆரம்பிக்கும் ஓவியங்கள்  

அங்கு நடந்தேறிடும் ஒரு க்ரைம் புதிர்


பனியின் குளிரோ மேயரின் மேடை பேச்சோ உப்புமாவை போன்றது  மேயரின் துணைவியாருக்கு. 

இந்த மேயரின் மனைவியிடம் மாட்டி கொள்கிறார் நம் துப்பறியும் கதாநாயகி ரூபின். அவங்க வீட்ல ஒரு திருட்டு நடக்குது, ரூபின் தான் கேஸ பார்த்துக்கனும் என்று கேட்கிறாங்க, சாதாரன திருட்டு கேஸூக்கு நாம் எதுக்கு என்று நொந்து கொண்டே செல்கிறார்.  சரி நம்ம வேலையை செய்வோம் என்று கடமையை செய்கிறார்.  கைரேகை  தடயங்கள் ஆட்டம் காண்பிக்கின்றன. மேயரின் மனைவி  திரும்ப அழைத்து உதவி செய்யுமாறு கேட்டு கொள்கிறார்.

நம்ம டிடெக்டிவ் யாருக்கும் தெரியாமல் புதிருக்குள் நுழைய ஆரம்பமாகிறது "96 மணி நேரங்கள்"



நட்புன்னா என்னனு தெரியுமா, அதுக்கு பெயர் க்ளெண்டா என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொள்கிறார் தோழி

மனைவி மீது அக்கறை காட்டும் கணவனாக ஜார்விஸ்

நீ ஒரு அதிர்ஷ்டகாரி என்று எண்ணும் முன்பே விதி விளையாடுகிறது

ஜூலியா மனசாட்சி உறுத்தலால் உண்மையை சொல்லி விடுகிறாள்

எங்களுக்கு உங்க வாக்குமூலத்தை தவிர வேற எந்த சாட்சியமும் இல்லை புதிய பறவை படத்தில் எம்.ஆர்.ராதா வசனம்

பேசுவார், அதை போல் இங்கு கொலை நடந்ததற்கான சாட்சி ஜூலியாவின் வாக்குமூலத்தை தவிர வேறு எதுவும் இல்லை

சடலம் கிடைக்கவில்லை இன்னார்  என்று அறியவும் வழியில்லை

ஆனால் திட்டமிட்ட கொலை என்று தீர்ப்பாகி மரண தண்டனை விதிக்கபடுகிறது


வருடங்கள் பல கடந்த பின்னே மீண்டும் பனியல் ஒருநாள்,  குறும்பக்கார இருவரால் ஒரு பிராங்க் வீடியோ எடுக்க படுகிறது.  படம் பிடிக்கபட்ட நபர் யார்? 

இதற்கும் மேயர் வீட்டில் நடக்கும் திருட்டுக்கும் என்ன சம்பந்தம்? 

திருட்டில் கிடைக்கும் கைரேகைகள் இறந்து போன ஜூலியாவுடையது தான? 

இறந்து போனதாக கருதப்படும் ஜூலியா எப்படி தப்பி பிழைத்தார்? 

இதற்கிடையே  இன்னொரு நபர் துப்பு துலக்கிறார். யாரிவர்? இவர் ஏன் இதை செய்ய வேண்டும்? ரூபினிடம் இருப்பவர் உண்மையைதான் பேசுகிறாரா?


கேள்விகளுக்கு விடை கிடைக்க புதிர்கள் விடுபடுகின்றன


ஆரம்பத்தில்  நடக்கும் கொலையில் சில உறுத்தல்கள் இருந்து கொண்டே இருந்தன

க்ளெண்ட்டால் எப்படி ஒரு ஆணின்  எடையை அதுவும் சடலத்தை எளிதாக தூக்கி செல்ல முடிகிறது என்று

மற்றும் அவ்வளவு நெருக்எத்தில் ரத்தபொக்கு கொஞ்சம் வந்திருக்க வேண்டும், அது என்னவோ திருஷ்டி பொட்டுடாட்டும் ரத்தத்துளி. பின்னர் க்ளெண்டா பனியில் சீக்கரமாக உடலை தூக்கி போட்டு வந்துவிடும் நேரமும் உறுத்தலாக இருந்தது. 

ஜூலியாவை சரியாக கணித்து வைத்துள்ளனர் அவள் தோழியும், கணவரும்.


வெள்ளைப்பனி பார்க்க அழகு என்றாலும், பனியன் குளிர்கரங்களோ  ரசிக்க முடியாத கொடுமைக்கார ராட்சனாக இருக்கிறது, விமான விபத்தில் ஜூலியா தப்பித்தது வரமா சாபமா என்ற அளவுக்கு ஆகிவிடுகிறது நிலைமை. புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது என்று பாட்டு பாடும் அளவுக்கு ஆரம்பத்தில் செல்பவள் "ரெவணன்ட்" லியோ டிகாப்பிரியோ மாதிரி ஆகிவிடும் நிலைமை

கோடைமலரின் கடைசி பக்கங்களில்  உள்ள ஓவியம் பனியன் ஆட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.



நான் கவனித்து தவறாக கணித்த ஒன்று

பக்கம் 61-இல் ஒரு பேணலில் வருவதை ஓவிய பிழை கருதினேன், கதையின் புதிர் விடுபடும் போதுதான் சந்தேகம் வந்திருக்க வேண்டிய இடம் என்று உறைத்தது.

ஆசிரியரும் ஓவியரும் சிறப்பாக இதனை செய்து உள்ளார்கள். பாராட்டுகள் பல.


பனியின் ஓவியங்களை பாராட்டிட வேண்டும் அவ்வளவு அழகாக தத்ருபமாக்கி இருக்கிறார்கள்.


பாத்திர படைப்புகள் சிறப்பு. 

மேட்ஜ்ஜை பாராட்டிட வேண்டும். ஜூலியாவை பார்த்து கொண்டதும் இல்லாமல் புதிரை விடுவிக்க அவளுக்கு உதவுவது பெரிய மனது. ஜுலியாவுக்கு கிடைத்த ஒரு நல்ல நட்பு

மேயரின் மனைவி தொல்லை படுத்துபவர் போல் தோன்றினாலும் மனிதர்களை எடை போடுவதில் சமர்த்து, மேட்ஜ் மற்றும் நம்ம ரூபினின் திறமை மேல் வைக்கும் நம்பிக்கைகள அதை பறைசாற்றுகின்றன.



ரூபினை கலாய்க்கும் சக ஆபிஸர்கள் பேச்சுகள்,  மேயர் போலீஸாரிடம் டாக்டர்களிடமும்  பேசியதை கிண்டல் செய்யும் இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன, கிண்டல் செய்யும் வசனங்கள் அருமை 


ரூபின் கதைகளை வாசித்ததில் எனது பார்வையில்  நான் பார்த்த  ஒற்றுமைகள் 

உண்மைகள் வெளிவர சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளால் சம்பந்தபட்டவர்களை தேடி செல்கிறது.

அதுக்கென்று ஒரு உயிர் இருந்து சரியான நேரம் பார்த்து ஒரு முயற்சி  எடுப்பது போல் தோன்றியது

நேர்கோடு என்று ஒன்று செல்லும் கணித்து விடலாம்,  இடியாப்ப சிக்கல் என்று ஒன்று இருக்கும், நாம் ஊகிக்க தவறிவிடுவோம்.

நேர்கோடு சுலபமாக இருந்தாலும், கதையினை நகர்த்தி செல்லும் விதம் படிக்க சுவாரஸ்யமனதாக  படைக்கபட்டுள்ளது.  


பெண் கதாநாயகியர் இல்லாத குறையை ரூபின் தீர்க்கிறார். நீதி காவலர் பணியில் இருப்பது, அவர் நிலைத்து நிற்க ஒரு கூடுதல் காரணமனதாக கருதுகிறேன் . 

மற்றும் ரூபின் சோ க்யூட்😊😊😊