Thursday, January 11, 2024

தோர்கல் - மரணத்தின் நிறம் நீலம்




கடலின் சீற்றத்தினால் பிரிந்த தோர்கல் குடும்பம் அரெக்னியாவின் சாப விமோசனத்திற்கு பிறகு தீவில் ஒன்று சேர்கின்றனர். அங்கே தங்கிவிட வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் தோர்கல் வேறு புதிய இடம் தேட எத்தனித்து படகை செப்பனிட்டு கிளம்ப ஆயத்தமாகிறார். ஜோலனின் நண்பர்கள் அத்தீவிலேயே தங்கிவிட விருப்பம் தெரிவிக்க, கூடவே மப்ஃ பும் விட்டு செல்ல நேரிட, பிரிவின் வலியை முதல் முறையாக உணர்கிறான் ஜோலன். தீவின் மக்களின் அன்போடு விடைபெற்று பயணத்தை மேற்கொள்ளும் தோர்கல் குடும்பம்.

பத்து நாளுக்கு பிறகு  கண்ணில் படும் தனித்து விடப்பட்ட படகை ஆராய்கின்றனர். ஆபத்தை வாங்கிருக்கிறோம் என்றயறியாமல் அதனை கடந்து செல்ல கடற்கொள்ளையர்கள என அவர்கள் நினைக்கும் குள்ளர்களிடமிருந்து தப்பியோடும் முயற்சியில் ஜார்காஜ் என்னும் இளவரசனை சந்திக்கிறார்கள். அவன் அவர்களுக்கு தங்க இடமும், உணவும், ஓய்வு எடுக்கவும்  வசதிகள் செய்து தருகிறான். தோர்கல் சந்தேக கண்ணோட பார்க்க, ஆரிசியா இளவரசனுக்கு நல்கிய குணம் என்கிறாள்.  படகை செப்பனிட்ட நேரமும்  கிடைக்க பெற இளவரசனின் மாளிகையில் தங்கி பொழுதை கழித்து விட்டு கிளம்ப எத்தனிக்கிறார்கள்.  அப்பொழுது மறைந்திருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வெளிவர, அங்கிருக்கும் ஒவ்வொரும் நொடியிலும் மரணத்தின் நிறம் நீலமாக மாறும் என்பதை தெரிந்து கொள்கிறார்கள் தோர்கல் குடும்பம், மரணத்தின் பிடியிலிருந்து   தன் குடும்பத்தை காப்பாற்றிட  ஆபத்து நிறைந்த தடைகளை தாண்டி சென்று உதவி பெற்றிட விழைகிறார், தோர்கல். என்ன ஆபத்துகளை சந்திக்க போகிறார், அவைகளை முறியடித்து தன் உயிராக கருதிடம் குடும்பத்தை காப்பாற்றினார என்பது கதை.


ஒரு சாமன்யானாக தன் குடும்பத்தோடு நேசமுடன் வாழ்க்கையை வாழு விரும்பும் தோர்கல். அப்படி ஒரு இடம் புறப்படுகிறார், ஆனால் வழி நெடுகிலும் ஆபத்துகளுக்கு பஞ்சமில்லை.

பிரபஞ்சத்தின் புதல்வனே, அப்படியே போகும் வழியெல்லாம் தென்படும் துயரங்களை அழித்து நல்லது நடக்க துணை புரிவாயாக என்பதாக இருக்கிறது கடவுளர்களின் வரம்.

தங்களால் புரிந்து கொள்ளபடாத மாற்று மக்களை ஒதுக்கி வைப்பதில் சமூகம் என்றும் தவறியதில்லை, இங்கயும் அப்படியே உயரத்தில் குறைவு கண்டவர்களை விரட்டி விட்டதும் அல்லாமல், கெட்ட பெயரும் சேர்த்து பரப்பி விடபட்டுள்ளது. அந்த நல்ல மனிதர்களை சந்தித்து அவர்களின் உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது தோர்கலுக்கு.

தோர்கல் தன் நோயோடு ஒவ்வொரு தடையாக தாண்டி சென்று கொண்டிருக்க, காத்திருக்கும் ஒவ்வொரு நாளும் கொடுமையானதாக போகிறது தோர்கல் குடும்பத்தினருக்கு. சக மனிதர்களின் இறப்பை காண நேரிடும் பரிதாபம், மற்றும் நாளொரு நாளாக வளர்ந்து வரும் நோயின் தீவிரம். மனவலியை கவனிப்பதா அல்லது உடல்வலியை கவனிப்பதா என்ற இக்கட்டான சூழ்நிலை.


எவ்வழியும் இன்றி இறந்திடுவோம் என்று தெரிந்தும் நோய் முற்றி தீவிரம் அடையும் வரை காத்திருக்கும் மக்கள்,   ஜீவன் இருக்கும் வரை  எதொவொரு வழி கிடைத்திடாத என்ற மானிடத்தின் நம்பிக்கையை காமிக்கிறது.


ஜாஜ்கார் மற்றும் ஜார்காஜ் இடம் மாறி இருந்தால் குணம் மாறி இருக்குமோ, ஒருவேளை சகோதரர்கள் பிரிய நேரிடாமல் இருந்திருந்தால், குணங்கள் எவ்வாறு இருந்திருக்கும்🤔🤔🤔

 

தோர்கல் அங்கே வராவிடில் அங்கு உள்ள மனிதர்களுக்கு விடிவு கிடைத்திருக்குமோ 

இங்குதான் கடவுளர்களின் மேல் சந்தேகம் வருகிறது, தோர்கல் மூலமாக மக்களுக்கு விடிவு கிடைக்க செய்வது. அவர் முழுதாக காரணம் இல்லை என்றாலும், ஒரு கருவியாக பயன்படுகிறார். 

இந்த ஆல்பத்தை வித்தியாசபடுத்தி காட்டிய ஒன்று ஜோலனை கதைசொல்லியாக காட்டியது. வளர்ந்து வரும் பதின் பருவத்து சிறுவனின் பார்வையில்  தந்தையை காண்கிறோம். அது மட்டுமல்ல வளர்ச்சி பெற்று  வரும் அவனது உணர்வுகளையும் மாற்றம் கண்டு வரும் ஜோலனை காண்பிக்கிறார் ஆசிரியர். தந்தை போல் வளர பிரியபடும் அவன் காதலை சொல்ல மனத்திடமும், எதிரியை சண்டையிட்டு ஜெயிக்க உடல்திறனும் தன்னிடம் இல்லை என்றறிருந்து அமைதி காக்கிறான். 


ஸ்பிலிட் ஓவியங்கள், சாகாவரத்தின் சாவி கதையில் பார்த்தது, மறுபடியும் இக்கதையில் பயன்படுத்தி உள்ளனர். இங்கே தோர்கல் வெற்றி என்றறியாத முயற்சியில் இருட்டான ஆற்றின் அடியில் நீந்தி செல்வதை காண்பிக்க அருமையாக சித்திரபடுத்தி உள்ளனர். 


இங்கே இன்னொரு சித்திரத்தையும் பாராட்டியாக வேண்டும். ஜார்காஜ் மற்றும் ஜாஜ்கார் சித்திரங்களை உடல் மொழியில் வித்தியாசபடுத்தி காட்டி உள்ளார், ஏனென்றால் ஜாஜ்காரை பார்த்தவுடன் உருவத்தில் அவனை இளவரசனை போல் இருந்தாலும் இளவரசன் இல்லை என்பதை முதல் அறிமுகத்திலே புரிகிறது. 


ஓவியங்கள்   அருமையோ அருமை. 

கதையும் சுவாரஸ்யமானதாக படைக்கபட்டுள்ளது. வான்ஹாம்மே வானஹாம்மே தான்


2014 பின் பாதியில் அறிமுகம் ஆன தோர்கல் மீது ஏற்பட்ட க்ரஷ் இன்று வரை தொடர்கறது😁😁😁

வான்ஹாம்மே பற்றி நான் தேடி தெரிந்து கொள்ள முக்கிய காரணமாக இருந்தவர் தோர்கல்.

No comments:

Post a Comment